நள்ளிரவு 12.30 மணிக்கே சலார் முதல் காட்சியை துவங்கும் கேரளா திரையரங்குகள்

பொதுவாக பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. மற்ற மாநிலங்களில் இது குறித்து பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து மாறி மாறி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கேரளாவில் 5 மணிக்கு திரையிடப்பட்டு வந்த அதிகாலை காட்சிகளை விரைவில் வெளியாக இருக்கும் சலார் படத்திற்காக அதிகாலை 12:30 மணிக்கே திரையிட இருக்கிறார்கள். இதற்காக ரசிகர் மன்றங்கள் இப்போதே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் மட்டுமல்ல, மலையாள நடிகர் பிரித்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் கேரளாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தை கேரளாவில் பிரித்விராஜின் சொந்த நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் தான் வெளியிட இருக்கிறது,, அந்தவகையில் தற்போதிருந்தே இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை கேரள ரசிகர்கள் துவங்கி விட்டார்கள் என்று சொல்லலாம். இந்தப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.