துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!!

பொன்னியின் செல்வன்-2, மாமன்னன் படங்களை அடுத்து லால் சலாம், அயலான், சீனி, தனுஷ்-50, தக் லைப் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இது தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் துபாய் நாட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதில் அந்நாட்டை சேர்ந்த பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் உருகி பாடுவதை ரசிக்கும் ஏ.ஆர்.ரகுமான் அதை படம் பிடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.