Horoscopes, astrology: What this week will be like: 12 zodiac sign benefits and cures | இந்த வாரம் எப்படி இருக்கும் ?: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (15.12.2023 முதல் 21.12.2023 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

கேது நன்மையை வழங்குவார். துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.

அசுவினி: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் எதிர்ப்புகள் விலகும், உடல்நிலை சீராகும், இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதன்கிழமை முதல் லாப சனியால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

பரணி: புதன்கிழமை முதல் லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும், ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். வியாபாரம் விருத்தியாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் ராசிநாதன் மறைவு பெற்றிருப்பதால் யோசிக்காமல் சில செயல்களை செய்வீர்கள். அதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் குரு பகவானின் பார்வைகளால் நன்மைகளை அடைவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

ரிஷபம்

ராகு நன்மைகளை வழங்குவர். நவகிரகத்தில் உள்ள ராகு பகவானை வணங்கி வழிபட வளமுண்டாகும்.

கார்த்திகை 2,3,4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குலதெய்வ அருளால் நன்மைகள் தோன்றும். லாப ராகுவால் சங்கடங்கள் போகும். செயல்கள் லாபமாகும்.

ரோகிணி: லாப ஸ்தானத்தில் யோக காரகன் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செயல்களில் ஆதாயம் தோன்றும். புதன் கிழமை முதல் குரு பகவானின் பார்வைகளால் நன்மைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் 1,2: புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். வியாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை செயல்களில் நிதானம் அவசியம்.

சந்திராஷ்டமம்

13.12.2023 மதியம் 11:54 மணி – 15.12.2023 மதியம் 3:59 மணி

மிதுனம்

செவ்வாய், சனி நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபட வளம் உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: ஆறாமிடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். பத்தாமிட ராகுவால் புதிய முதலீடுகளில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். வெள்ளிக்கிழமை எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.

திருவாதிரை: நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகள் இழுபறியாகும். என்றாலும் புதன்கிழமை முதல் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் வருமானம் அதிகரிக்கும், பொருளாதாரத் தடைகள் விலகும். சனிக்கிழமை எதிர்பாராத சங்கடங்களும் நெருக்கடிகளும் உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல் படுவதால் வியாபாரத்தில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும், ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். ஆறாமிட செவ்வாயால் எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்

15.12.2023 மாலை 4:00 மணி – 17.12.2023 இரவு 6:48 மணி

கடகம்

கேது, சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.

புனர்பூசம் 4: மூன்றாமிட கேதுவால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். திங்கள் முதல் உங்கள் எண்ணப்படி செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.

பூசம்: பண வரவில் உண்டான இழுபறி நிலை மாறும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசு விவகாரங்களில் அனுகூலம் உண்டாகும். திங்கள்கிழமை செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள்.

ஆயில்யம்: மூன்றாமிட கேதுவும், ஆறாமிட சூரியனும் வாரம் முழுவதும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். வரவு அதிகரிக்கும், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், செவ்வாய்க்கிழமை அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்

17.12.2023 இரவு 6:49 மணி – 19.12.2023 இரவு 9:08 மணி

சிம்மம்

சுக்கிரன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: புதன்கிழமை வரை ஆறாமிட சனியாலும், அதன்பின் பாக்கிய குருவாலும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். செயல்களில் லாபம் காண்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள். வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். செவ்வாய் புதனில் செயல்களில் விழிப்புணர்வு தேவை.

பூரம்: உங்கள் நட்சத்திர நாதன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வரவுகள் அதிகரிக்கும் பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். பாக்கிய குருவால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சிகள் ஆதாயமாகும். புதன் வியாழனில் விழிப்புணர்வு அவசியம்.

உத்திரம் 1: குடும்ப ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கினாலும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியும், புதன் கிழமை முதல் குருவும் உங்கள் செயல்களை லாபமாக்குவார்கள். விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். வியாழக்கிழமை சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

சந்திராஷ்டமம்

19.12.2023 இரவு 9:09 மசி – 21.12.2023 இரவு 11:59 மணி

கன்னி

சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவர். பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டு வர சங்கடம் குறையும்.

உத்திரம் 2,3,4: ஞான மோட்சக்காரகன் ராசிக்குள்ளாகவும், யோகக்காரகன் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதும் உங்கள் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும் என்றாலும் அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் முயற்சிகள் வெற்றியாகும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பண வரத்து அதிகரிக்கும்.

அஸ்தம்: மூன்றாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவதால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். புதன்கிழமை முதல் சகல நன்மைகளும் தோன்றும்.

சித்திரை 1,2: தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் வார்த்தைகளில் தெளிவு உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

சூரியன், ராகு, குரு நன்மையை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட்டு வர வளம் கூடும்.

சித்திரை 3,4: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எண்ணங்கள் நிறைவேறும். புதன் கிழமை முதல் குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் சங்கடங்கள் விலகும். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்த தகவல் வரும்.

சுவாதி: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் செயல்களில் வேகம் உண்டாகும். மற்றவரால் செய்திட முடியாத வேலைகளை நீங்கள் செய்து முடிப்பீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். செலவிற்கேற்ற வருமானம் வரும். ஆறாமிட ராகுவால் உடல்நிலை சீராகும்.

விசாகம் 1,2,3: உங்கள் லாப ஸ்தானாதிபதி மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி செயல்களில் ஆதாயம் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும், ஆறாமிட ராகுவால் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதன் கிழமை முதல் குருவின் பார்வை உங்களுக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

கேது, சுக்கிரன் நன்மையை வழங்குவார். திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து வழிபட சங்கடம் தீரும்.

விசாகம் 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் வருமானத்தை அள்ளித் தருவார். குடும்பத்தில் இருந்த சங்கடம் போகும். வாரம் முழுவதும் உங்கள் பாக்கியாதிபதி சந்திரன் நன்மைகளை வழங்குவார். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும். உங்கள் ராசிநாதன் ஆட்சி பெற்று ராசிக்குள் சஞ்சரிப்பதால் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

அனுஷம்: உங்கள் நட்சத்திர நாதன் புதன் கிழமை வரை மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனமும் பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

கேட்டை: உங்கள் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் தோன்றும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். புதன் கிழமை முதல் குருவின் பார்வைகளால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

சனி, குரு நன்மைகளை வழங்குவர். நவகிரகத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமைகளில் முல்லைப்பூ சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.

மூலம்: கடந்த கால சங்கடங்கள் இனி விலகும். புதன்கிழமை முதல் சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

பூராடம்:
உங்கள் ராசி நாதன் புதன்கிழமை வக்கிர நிவர்த்தி அடைவதால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும். குடும்பாதிபதியும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் நிலை உயரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: கடந்த வாரங்களில் இருந்த சங்கடங்கள் விலகும். சனி, குரு சஞ்சார நிலைகளால் உங்கள் செல்வாக்கு உயரும், எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

மகரம்

ராகு நன்மையை வழங்குவார். அனுமனை வழிபட அல்லல்கள் தீரும்.

உத்திராடம் 2,3,4: இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். மூன்றாமிட ராகு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். சனி பகவானும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் நன்மைகள் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.

திருவோணம்: தொடர்ந்து சங்கடங்களையே அடைந்து வந்த உங்களுக்கு இந்த வாரம் முதல் நன்மைகள் உண்டாகப்போகிறது. மூன்றாமிட ராகுவால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். குருவின் பார்வைகளால் வரவு அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் தோன்றும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் இனி நடைபெற ஆரம்பிக்கும்.

அவிட்டம் 1,2: உங்கள் செயல்பாட்டினால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசு வழி செயல்களில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உண்டான நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

சூரியன் நன்மைகளை வழங்குவார். பைரவர் வழிபாடு சங்கடங்களை நீக்கும்.

அவிட்டம் 3,4: உங்கள் ராசிநாதன் புதன் கிழமை முதல் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சதயம்: ராசிக்குள் சனி பகவான், இரண்டாமிடத்தில் ராகு, எட்டாமிடத்தில் கேது சஞ்சரித்தாலும் லாப சூரியனால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் நன்மை உண்டாகும். இரண்டாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பண வரவில் தடைகளும் குடும்பத்தில் குழப்பமும் தோன்றும். எட்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் வம்பு வழக்குகள் என்று ஏற்படக்கூடும். ஒவ்வொரு செயலிலும் இந்த வாரத்தில் எச்சரிக்கை அவசியம்.

மீனம்

குரு, சூரியன் நன்மைகளை வழங்குவர். சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

பூரட்டாதி 4: உங்கள் ராசியாதிபதி குரு பகவான் புதன்கிழமை வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் செயல்களில் நிதானம் இருக்கும். யோசித்து செயல்படுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் நண்பர்களுடன் கருத்து பேதம் உண்டாகும்.

உத்திரட்டாதி: ஜென்மத்தில் ராகு, ஏழில் கேது சஞ்சரித்தாலும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் நெருக்கடிகள் விலகும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

ரேவதி: புதன்கிழமை முதல் ஏழரை சனி ஆரம்பமாகும் நிலையில் குருவும் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.