இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்ன தெலுங்கு நடிகர் மோகன் பாபு

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள்.

கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அது திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை.

நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன்பாபு, அவரது மனைவியுடன் இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். “அதிர்ச்சியாக இருந்தது. இதயம் உடைந்த தகவலைக் கேட்டபின் இளையராஜா அவர்களை சந்தித்து அவரது மகள் பவதாரிணி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தாருக்கு கடவுள் சக்தியைக் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.