பத்தாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் போலியானவை…

பத்தாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் போலியானவை என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றைய (20) தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்தார்.

அத்துடன், பத்தாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் போலியானவை என சுட்டிக்காட்டி அமைச்சர், அதன் உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்தினார்.

இந்த வீட்டுத் திட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அது தொடர்பில் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு சம்பள நிர்ணய சபையை கூட்டுமாறும் தொழில் அமைச்சரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.