மார்ச். 15ல் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படப்பிடிப்பு துவங்குகிறது

சில வருடங்களுக்கு முன்பு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தை பா. இரஞ்சித் தயாரிப்பதாக அறிவித்தனர். இதற்கிடையில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரி செல்வராஜ் இயக்கியதால் இப்படம் தாமதமானது. இத்திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என்பதால் இதற்காக துருவ் விக்ரம் பல மாதங்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 15ம் தேதி தூத்துக்குடியில் தொடங்குகின்றனர். இதன் படப்பிடிப்பு 70 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.