இன்றும் நாளையும் (பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 01) சுற்றுச்சூழலில் நிலவும் அதிக வெப்ப நிலை மேலும் அதிகரிக்க கூடும் என கிடைக்கப் பெற்றுள்ள தகவலின்படி, நாட்டிலுள்ள எந்தவொரு பாடசாலை மாணவர்களும் வெளிப்புற விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளிலோ அல்லது விளையாட்டு நிகழ்வுகளிலோ அல்லது எந்தவொரு வெளிக்கள செயற்பாடுகளிலுமோ பங்குபற்றுவதை தவிர்க்குமாறு சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கும் வகையில் ஏற்கனவே மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி செயற்படுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.