பொன்முடிக்கு எதிரான சொ.கு. வழக்கின் இறுதி விசாரணையை ஏப்.15-க்கு ஒத்திவைத்து ஐகோர்ட்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் மார்ச் 15 வரை நடைபெறும் என தேதி நிர்ணயித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிட்பபட்டிருந்தது. இந்த வழக்கை ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதிகளில் இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.