வருத்தத்தில் ஜாக்குலின்

விஜய் டிவி பிரபலமான வீஜே ஜாக்குலின் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக பேசுவதாக தனது வருத்தத்தினை பதிவு செய்துள்ளார். தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்த பின் சினிமா வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஜாக்குலின், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வருவதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் சிலர் ஜாக்குலினை பற்றி தவறாக கூறி வருகின்றனராம். சிலர் அவரை தவறாகவும் கமெண்ட் செய்கிறார்களாம். இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஜாக்குலின் ஒரு கட்டத்தில் இந்த கமெண்டுகளை கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறாராம். இனி இதுமாதிரியான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் ஜாக்குலின் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.