ரூ.5,785 கோடி சொத்து; மக்களவைத் தேர்தல் களத்தின் `பணக்கார' வேட்பாளர் – யார் இந்த சந்திரசேகர்?

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதியன்று 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில், முதற்கட்ட வாக்குப்பதிவில் வேட்பாளர்கள் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தின்படி மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத், ரூ.717 கோடி மதிப்பிலான சொத்துகளுடன், பணக்கார வேட்பாளராக அறியப்பட்டார்.

பி.சந்திரசேகர் – தெலுங்கு தேசம் கட்சி

இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்பாளர்கள் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரங்களின் மூலம், தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பளார் பி.சந்திரசேகர் பெரும் பணக்கார வேட்பாளர் என்று தெரியவந்திருக்கிறது. ஆந்திராவில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இவர், பிரமாணப் பத்திரத்தில் தனது குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5,785 கோடி என்று தெரிவித்திருக்கிறார்.

இதில், இவரின் பெயரில் ரூ.2,448.72 கோடி மதிப்பிலான சொத்துகளும், இவரின் மனைவி ஸ்ரீரத்னா கோனேருவின் பெயரில் ரூ.2,343.78 கோடி மதிப்பிலான சொத்துகளும், இவரின் பிள்ளைகளின் பெயரில் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடிப்படையில் மருத்துவர் மற்றும் தொழில்முனைவோராக அறியப்படும் பி.சந்திரசேகர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆசிரியராகப் பணியாற்றுவது முதல் சினாய் மருத்துவமனையில் UWorld (ஆன்லைன் கற்றல் மற்றும் ஆய்வு வளங்கள் தளம்) நிறுவுவது வரை தனது வாழ்க்கை பயணத்தின் மூலம் பிரமிக்க வைக்கிறார்.

பி.சந்திரசேகர் – தெலுங்கு தேசம் கட்சி

1999-ல் விஜயவாடாவின் என்.டி.ஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த இவர், 2005-ல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்.டி படித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் இவருக்கு பங்குகளும், முதலீடுகளும் இருக்கிறது. மேலும், அமெரிக்காவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ், டெஸ்லா போன்ற சொகுசு கார்களையும் இவர் வைத்திருக்கிறார்.

பி.சந்திரசேகர் – தெலுங்கு தேசம் கட்சி

பொதுசேவையில் ஆர்வம்கொண்ட இவர் 2010 முதல் தெலுங்கு தேசம் கட்சியின் என்.ஆர்.ஐ பிரிவின் சார்பாக கட்சியின் பல நலத்திட்டங்களுக்கு ஆதரவளித்துவருகிறார். இவர் 2014-ல் மக்களவைத் தேர்தலிலேயே நரசராவ்பேட்டை தொகுதியில் போட்டியிட எண்ணினார். இருப்பினும், அப்போது அந்த வாய்ப்பு வேறு ஒரு நபருக்கு சென்றது. இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.