பச்சிலைப்பள்ளியில் 500 குடும்பத்திற்கு காணி உறுதி வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுக்குரிய காணிகளில் வாழும் சுமார் 500 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் இல்லாத நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாக  காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய தெளிவின்மை  காரணப்படுவதால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அதிகரிகளுடன் கலந்துரையாடியதுடன், மக்களுக்கும் காணி நடைமுறைகள் தொடர்பாக தெளிவை ஏற்படுத்தியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.