சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர்நாயகம அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறும் கணிதப் பாடம் மற்றும் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஏனைய பாடங்களும், நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் தடைகளும் இன்றி நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்;பாக, உரிய அதிகாரிகள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.