கேரளா: `திருமணமான ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமை' – இளம்பெண் புகார்… ஜெர்மனுக்குத் தப்பிய கணவன்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பந்தீரங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பி.கோபால் (29). இவர் ஜெர்மன் நாட்டில் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். ஜெர்மன் நாட்டில் அவருக்கு குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் பி.கோபாலுக்கும் எர்ணாகுளம் பறவூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்ஜினீயரிங் முடித்த அந்த இளம்பெண்ணும் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணை எதுவும் வேண்டாம் எனக் கூறிய ராகுல் பி.கோபாலின் குடும்பத்தினர், திருமணம் ஆன ஒரு வாரத்தில் தன்னிடம் வரதட்சணை மற்றும் கார் கேட்டு டார்ச்சர் செய்ததாக புகார் கூறியுள்ளார். இது குறித்து ராகுலை திருமணம் செய்த இளம்பெண் கூறும்போது, “கடந்த 5-ம் தேதி எங்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த 11-ம் தேதி ராகுலிடம் அவரது தாய் உஷா ஏதோ ரகசியம் பேசினார். அன்று இரவு ராகுல் என்னிடம் வரதட்சணை கேட்டு தாக்கினார். மறுநாள் எனது பெற்றோர் வந்தபோது என் உடலில் ஏற்பட்ட காயத்தை பார்த்து என்னை அழைத்துச் சென்றனர்” என்றார்.

ராகுல் ஜெர்மன் தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட ராஜேஷ்

இந்த நிலையில் வரதட்சணை கொடுமை குறித்து இளம்பெண் மற்றும் அவரது தந்தை ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது உடனே வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், புகார் அளிக்கச் சென்ற இளம்பெண்ணின் தந்தையை இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராகுல் ஜெர்மனுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸார் உறுதி செய்துள்ளனர். ராகுல் பி.கோபால் ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல உதவிய அவரது நண்பர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ராகுலின் வீட்டில் உள்ள சி சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்யவும் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராகுல் பி.கோபால் திருமணம்

இது குறித்து கேரளா காங்கிரஸ் எதிக்ர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “கேரளாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தலைமைச் செயலகத்தில் ஒரு குழு இருந்துகொண்டு காவல்துறையை கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி-க்களையும் சி.பி.எம் மாவட்ட கமிட்டி கட்டுப்படுத்துகிறது. பந்தீரங்காவில் இளம்பெண் தாக்கப்பட்டது சம்பவத்தில் முதலில் போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட இளம்பெண் எனது சட்டசபை தொகுதிக்குள் வருவதால் நான் போலீஸ் அதிகாரிகளை போனில் அழைத்து பேசினேன். ஆனாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மீடியாக்களில் செய்தி வெளியான பிறகே போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். திருமணம் ஆன ஒரு வாரத்துக்குள் வரதட்சணை கேட்டு இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம், கேரளாவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.