Vetrimaaran: “பாலு மகேந்திரா சாருக்கு ஸ்ட்ரோக் வந்துருச்சு அப்போ…" – வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்தார் சூரி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.

தற்போது இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படத்தில் நடித்திருக்கிறார் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் துரை செந்தில்குமார் குறித்து வெற்றி மாறன் பேசினார்.” அது ஒரு கனா காலம். பாலு மகேந்திரா சாருக்கு ஸ்ட்ரோக் வந்துருச்சு. அப்போ சார்கூட துரை செந்தில்குமார்தான் இருந்தான். அவரை பாத்ரூம்க்கு கூட்டிட்டு போறதுல இருந்து எல்லாமே அவன்தான்.

garudan movie audio launch

அப்போ நான் கேட்டேன் எப்படி இதெல்லாம் பண்றனு.. அதுக்கு அவர் ‘எங்க அப்பக்காக இதெல்லாம் பண்ணமாட்டேனா’னு கேட்டாரு. துரை, சசிகுமார் இந்த படத்தோட கதாபாத்திரத்துல கேட்க போறதா செந்தில் சொன்னாரு. இந்த கதாபாத்திரம் அவர் ஏன் பண்ணனும்னு யோசிச்சேன். அப்புறம் சூரிக்காக ஒத்துக்கிட்டதா சொன்னாரு. சமுத்திரக்கனி நடிப்பு இந்த படத்துக்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுக்குது. எல்லோரும் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.