ஆபாச வீடியோவால் விபரீதம்: தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்

பெங்களூரு,

பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அதாவது ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் 14 வயது என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்கள். தினமும் அவர்களது பெற்றோர் வேலைக்காக வெளியே சென்று விட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.

இதனால் அண்ணன் தங்கை இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்கள் அடிக்கடி செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர். அப்போது சிறுவன், தங்கையை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பமானாள். இது முதலில் யாருக்கும் தெரியவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது.

உடனே பெற்றோர் சிறுமியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பாகலகுண்டே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது சிறுமி, வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் தனது அண்ணன் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானதாக கூறினாள். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக கைது செய்தனர். மேலும் அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை வானிவிலாஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சகோதரியை, சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.