மனைவிமீது சந்தேகம்; குடிபோதையில் கணவன் வெறிச்செயல்! – ம.பி-யில் அதிர்ச்சி

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர், ஜவஹர் டெக்ரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்‌ பாரத் படேல் (வயது 50 ). இவர் மோட்டார் கேரேஜில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி பெயர் லக்ஷ்மி (வயது 42). இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக பாரத் படேல் சந்தேகித்து வந்துள்ளார்.

கொலை

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அன்று பாரத் படேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த பாரத் படேல், தன்னுடைய மனைவியை ஸ்க்ரூடிரைவர் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்தி, கொடூரமாக அடித்துக் கொலைசெய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த போலீஸார், பாரத் படேலைக் கைதுசெய்தனர்.

கைது

இது குறித்துப் பேசிய உயிரிழந்த பெண்ணின் சகோதரர், “பரத் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து என்னுடைய சகோதரியை அடித்துத் துன்புறுத்துவார். ஞாயிற்றுக்கிழமை இரவும் குடிபோதையில் வீடு திரும்பிய பாரத், என் சகோதரியிடம் வாக்குவாதம் செய்து, அவரைத் தாக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தனது கேரேஜிலிருந்து ஸ்க்ரூடிரைவர் மற்றும் பிற கருவிகளை எடுத்து லக்ஷ்மியை தாக்கிக் கொன்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, என்னை அழைத்து, `உங்கள் சகோதரியைக் கொன்றுவிட்டேன்’ எனக் கூறினார். அதைக் கேட்டு நான் அதிர்ந்து போய்விட்டேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.