"இவங்க உழைக்கலன்னா யாருக்கும் சோறு கிடையாது"- விவசாயத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குநர் சேரன்

2023 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கை விருது விழாவில் இயக்குநர் சேரனிடமிருந்து டாப் 10 மனிதருக்கான விருதைப் பெற்றார் நிலம் மீட்ட பொறியாளர் சரவணன்.

அப்போது நிகழ்வில் பேசிய சேரன், “இந்த விவசாயம் சார்ந்த மக்களோட நிக்குறது எனக்குச் சந்தோஷம். எனக்கு இவங்கதான் சோறு போடுபவர்கள். இன்னைக்கு விவசாயத்தைத் தீண்டத்தகாத விஷயமாக மாற்றுகிறார்கள். மருத்துவராக, பொறியாளராக வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மத்தியில் விவசாயியாக வரவேண்டும் என்று சொல்லவேண்டும். நான் சமீபத்தில் `Journey‘ என்ற ஒரு வெப் சீரிஸை எடுத்திருந்தேன்.

நிலம் மீட்ட பொறியாளர் – சரவணன்

அதில் ஒரு பெண் விவசாயியாக வருவதைக் காட்சிப்படுத்தியிருப்பேன். அதனைப் பார்த்த இளைஞர்கள் நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய  வேண்டும் என்று சொன்னார்கள் என்று விவசாயத்திற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். சேரன் பேசியதை முழுமையாகக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.