சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி… அம்பானி வீட்டு கல்யாண ஃபாலோ அப்..!

‘பாகுபலி 2’, ‘புஷ்பா 2’ படங்கள் போல, அம்பானி வீட்டு ப்ரீ வெடிங் கொண்டாட்டங்கள் இரண்டாம் பாகமாக இத்தாலியில் சொகுசு கப்பலில் நடைபெறவுள்ளன.

ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மனான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவரின் நீண்ட நாள் தோழியான ராதிகாவுக்கும் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானி – ராதிகா

குடும்ப நிகழ்வாக தனிப்பட்ட முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதால், விருந்து நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதற்கேற்றாற்போல் கடந்த மார்ச் மாதத்தில் ப்ரீ வெடிங் கொண்டாட்டங்கள் குஜராத்தில் கோலாகலமாக அரங்கேறின. 3 நள்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் என மிக முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர 1200 விஐபிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது.

இந்த ப்ரீ வெடிங் கொண்டாட்டத்தின் அடுத்தகட்டமாக, சொகுசு கப்பலில் முக்கிய பிரமுகர்களுக்கு பார்ட்டி நடைபெறவுள்ளது. இத்தாலியில் மே மாதம் 29-ம் தேதி கிளம்பும் இந்த சொகுசு கப்பல், ஜூன் முதல் தேதியன்று சுவிட்சர்லாந்தில் நிறைவு பெறும். இந்த சொகுசு கப்பல் பார்ட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 300 விஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மணமக்களான ஆனந்த் அம்பானி- ராதிகா, தங்கள் காதல் வாழ்க்கையின் முக்கிய தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 3 நாள் கப்பல் பயணத்துக்கு எதிர்காலத்துக்கான பயணம் (Futuristic Cruise) என்று பெயரும் வைத்துள்ளனர்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட்

பார்ட்டியில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்களின் பிரைவசியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் செல்போனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அம்பானி குடும்பத்தார் ஏற்கெனவே லண்டனில் முகாமிட்டுள்ளனர். இந்த ப்ரீ வெடிங் கொண்டாட்டம், நிறைவாக டெல்லியிலும் நடைபெறலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.