இந்த வருடத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்

அமைப்பு சட்டத்திற்கு இணங்க இந்த வருடத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது என்றும், தீர்மானிக்கப்பட்ட கால வரையறைக்குள் ஜனாதிபதிதேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனாதிபதினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேரா சிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்,

ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக பாராளுமன்ற தேர்தலை நடாத்தப் போவதாக குறிப்பிடும் பல ஊடகங்கள் நாட்டில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

.அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்க வருடத்தில் தெளிவாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் உறுதிப்படுத்தினார்.

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.