Natarajan: "சிறப்பான ஆலோசகராகவும், சக வீரராகவும் இருந்ததற்கு நன்றி அண்ணா!" – DK-வைப் பாராட்டிய நட்டு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பௌலரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரருமான நடராஜன் பேசியிருக்கிறார்.

ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டி முடிந்தவுடனேயே இரு அணி வீரர்களுமே தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தினேஷ் கார்த்திக்கும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார்.

தினேஷ் கார்த்திக்

வீரர்களும், ரசிகர்களும் தினேஷ் கார்த்திக் குறித்து பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்  அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரரான நடராஜனும் தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “உங்களோடு இணைந்து விளையாடி, உங்களது சிறப்பான கிரிக்கெட் பயணத்தை அருகிலிருந்து பார்த்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

எண்ணற்ற நினைவுகளை வழங்கி, சிறப்பான ஆலோசகராகவும், சக வீரராகவும் இருந்ததற்கு மிக்க நன்றி அண்ணா! கிரிக்கெட் உலகில் உங்களது புகழ் என்றென்றும் ஜொலிக்கும். ஓய்வுக்குப் பிறகு நீங்கள் செய்யும் விஷயங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.