சென்னை நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்த விழாவில்அம்பேத்கர் சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ், ”திருமாவளவன் போல என்னுடையது நீண்டகால கொள்கைப் போராட்டம் அல்ல. பலரும் என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். உடலுக்கு ஒரு காயம் ஏற்பட்டால், நாம் சும்மா இருந்தால் கூட அந்த வலி தானாகவே குறைந்துவிடும். […]