கேகேஆர் சாம்பியன்… சந்தோஷத்தில் கம்பீருக்கு முத்த பரிசு கொடுத்த ஷாருக்கான்! ஓடி வந்து கேட்ட ரிங்கு சிங்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தியது. இப்போட்டியை காண கொல்கத்தாவில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் வந்த ஷாருக்கான் சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணி வென்றதும் சந்தோஷத்தில் திளைத்தார். குறிப்பாக, வெற்றி இலக்கை கேகேஆர் அணி எட்டியவுடன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்ற ஷாருக்கான், கம்பீர் முதல் ரிங்கு சிங் வரை எல்லா வீரர்களுக்கும் முத்த பரிசு கொடுத்து மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். குறிப்பாக, வெற்றி இலக்கை கேகேஆர் அணி எட்டியதும் கம்பீரை ஓடி வந்து கட்டியணைத்து கொண்ட ஷாருக்கான், அவருக்கு நெத்தியில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். அடுத்து கூட்டத்துக்கு மத்தியில் அங்கும் இங்கும் கொண்டாட்டத்தில் இருந்த ரிங்கு சிங், ஷாருக்கானை பார்த்ததும் ஓடி வந்தார். 

 May 26, 2024

கேகேஆர் அணியின் செல்லப்பிள்ளையாக அவரை வைத்திருப்பதால் ஷாருக்கான் ரிங்குவை பார்த்ததும் நெஞ்சார கட்டியணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். ஆன்ரே ரஸ்ஸல் மகிச்சியில் கத்திகொண்டிருந்தபோது திடீரென கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தியவாறே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதை சக அணி வீரர்களுடன் கட்டியனைத்துக் கொண்டாடினார். சுனில் நரைன், கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம்கம்பீரை தூக்கி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். உடனே கம்பீர் சுனிலை தூக்கி கொண்டாடினார்.

May 26, 2024

கம்பீரிடம் இப்படியான அணுகுமுறைகளை எல்லாம் முன்பு யாரும் பார்த்தது இல்லை என்பதால், எல்லோரும் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். கம்பீர் தான் சுனில் நரைனை இந்த ஐபிஎல் சீசனில் ஓப்பனிங் இறங்க வைத்தார். இதனை பேட்டி ஒன்றில் கூட நரைன் தெரிவித்திருந்தார். மற்றொரு புறம் ஷாருக்கான் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை தேடிப் பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தபோது, ஷாருக்கானின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரும் மைதானத்துக்குள் வந்து கொல்கத்தா அணி வீரர்களை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றதற்காக வாழ்த்தினர். அப்போது, ஷாருக்கானின் மகள், ஆனந்த கண்ணீர்விட கேமரா எல்லாம் அவரையே ஃபோகஸ் செய்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் செம ஜாலியாக துள்ளிக்  குதித்துக் கொண்டிருந்தார்.

ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கையில் வாங்கியதும், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிபோல் கோப்பையை ஜாலியாக ஏந்திவந்து, சக அணி வீரர்களிடம் கொடுத்து கொண்டாடினார். கடைசியாக நரைன் பிறந்தநாளும் சேர்ந்து கொள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நேற்று இரவு கொண்டாட்டம் இரு மடங்கானது. ஆட்டம் பாட்டம் பார்டி என ஐபிஎல் சாம்பியன் கேகேஆர் அணி வீரர்கள் நேற்றைய இரவை கொண்டாடி தீர்த்தனர். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இதில் சுவார

ஸ்யம் என்னவென்றால் சாம்பியன் வென்ற கேகேஆர் அணியினருக்கு சிறப்பு பரிசுகளை கொடுக்க இருக்கிறாராம் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.