திருப்பூர்: போதையில் ரயில் பயணிகளுக்குக் கொலை மிரட்டல் – அதிகம் பரவிய வீடியோ… 4 பேர் கைது!

சென்னையில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சனிக்கிழமை சென்ற ரயிலில் மணிகண்டன், ரமா பிரபா ஆகியோர் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ரயில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலில் பயணித்த இளைஞர்கள் சிலர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதுடன், அதை தட்டிக் கேட்ட மணிகண்டன், ரமா பிரபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இதை தடுக்க முயன்ற ரமா பிரபா, மணிகண்டன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதை ரயிலில் சக பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும், மணிகண்டன் மற்றும் பயணிகள் கோவை ரயில் நிலையத்தில் உள்ள இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மிரட்டல் விடுத்தவர்கள்

இந்த வீடியோ வைரலான நிலையில், வீடியோவை ஆதாரமாக வைத்து திருப்பூர் வடக்கு போலீஸார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அதில், ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த அசோக் (20) மற்றும் 17 வயது சிறுவன் என இரண்டு பேரை முதலில் கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மண்ணரையைச் சேர்ந்த சுடலை ராஜ் (18), கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த கரண் (23) ஆகிய இருவரைக் கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‌

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.