Porsche Crash: மகனுக்கு பதில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த தாய்; கார் விபத்தில் Twist மேல் Twist!

புனேயில் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, இரண்டு பேரை கொன்றதாக 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அச்சிறுவனை பாதுகாக்க பல்வேறு தரப்பில் இருந்தும் போலீஸாருக்கு கடுமையான நெருக்கடி வந்தது. சிறுவன் விபத்து நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான். பின்னர் கடும் விமர்சனம் எழுந்ததால், போலீஸார் ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்து, பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். போலீஸார் இவ்விவகாரத்தில் மெத்தனமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சிறுவன் விபத்து நடந்தபோது மது அருந்தி இருந்தானா என்பதை தெரிந்துகொள்ள ரத்த பரிசோதனை நடத்த பல மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

சிறுவன்

ஆனால் மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு ரத்த மாதிரி எடுத்த டாக்டர் ஹரி, அதனை குப்பையில் போட்டுவிட்டு வேறு ஒரு ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் ரத்த பரிசோதனையில் சிறுவன் மது அருந்தவில்லை என்று அறிக்கை வந்தது. ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மையில் டாக்டர்கள் சோதனை செய்த ரத்தம், விபத்தை ஏற்படுத்திய சிறுவனுடையது இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து ரத்தத்தை மாற்றிக்கொடுக்க உத்தரவிட்ட டாக்டர் அஜய் மற்றும் ரத்த மாதிரி எடுத்த டாக்டர் ஹரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பரிசோதனைக்குச் சென்ற ரத்தம் யாருடையது என்று விசாரணை நடத்தியதில், அச்சிறுவனின் தாயாருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.

சிறுவன் மருத்துவமனைக்கு ரத்தம் கொடுக்க வந்தபோது, அவனது தாயாரும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ரத்த மாதிரியை கொடுத்துவிட்டு சிறுவனின் தாயார் தலைமறைவாகிவிட்டார். அவரை இப்போது போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறுவனின் தாயார்

அந்தப் பெண்ணின் கணவர் அகர்வால் மற்றும் சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வால் ஆகியோருக்கு இந்த விபத்து தொடர்பாக ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தை தங்களது டிரைவரின் மேல் சுமத்த திட்டமிட்டு அவரை மிரட்டி அடைத்து வைத்திருந்ததாக சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனுக்கு ரத்த மாதிரியை மாற்ற உத்தரவிட்ட டாக்டர் அஜய்யை புனே மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும்படி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சுனில் தான் அமைச்சர் ஹசன் முஸ்‌ரீப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு டாக்டர் அஜய் மும்பையில் பணியாற்றியபோது சிறுநீரக மோசடியிலும் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.