வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் செர்கெயி ஆகியோரிடையே சந்திப்பு

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக இடம்பெறும் பிரிக்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் அமர்வு – 2024 இல் கலந்து கொள்வதற்காக ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அலி சப்ரி நேற்று (10) ரஷ்ய நாட்டிற்கான வெளிநாட்டு அமைச்சர் செர்கெயி லெவ்ரோவ் இடையேயான இரு தரப்பு கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது, சுற்றுலா, உயர் கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற துறைகள் உட்பட இருதரப்பு தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்கு வெளிநாட்டு அமைச்சர்களும் இணங்கினர்.

இச்சந்திப்பின் போது, அமைச்சர் அலி சப்ரி, ரஷ்யா சமாதானப் படைக்கு இணைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ரஷ்ய வெளிநாட்டு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தவதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் அவரின் ஒத்துழைப்பிற்குக் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து வெளிநாட்டு அலுவலகங்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான உயர்தரப்பு பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் 2024 ஜூன் 26 – 27 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடலில் இப் பிரச்சினை முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு, நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.