யாழில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 65 கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி வகுப்பானது உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ. தர்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2023.12.02 இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் எழுத்து மூலம் மற்றும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், ஆட்சேர்ப்பு செய்யும் புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப காலாண்டு பயிற்சிநெறியாக இப்பயிற்சி நெறி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமென நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு (90 மணித்தியாலங்கள்) நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.