முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

கட்டட நிர்மாணப்பொருட்கள், விவசாய நடவடிக்கைகள், வேலைக்கான கூலி, இயந்திரங்களுக்கான கூலி, நுகர்வுப் பொருட்கள் எனப் பல்வேறுபட்ட பொருட்களுக்கான விலை நிர்ணயம் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் எரிபொருட்களின் விலை சற்று குறைவடைந்ததால் பொருட்கள் , சேவைகளுக்கான பொறுமதிகளிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.