Pradeep k Vijayan: `பூட்டிய வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த நடிகர்!' – அதிர்ச்சியில் திரையுலகம்

‘தெகிடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். ‘தெகிடி’ படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மேயாத மான்’, ‘என்னோடு விளையாடு’, ‘மீசைய முறுக்கு’, ‘ஒரு நாள் கூத்து’, ‘திருட்டு பயலே 2’, ‘இரும்புத்திரை’, ‘ஆடை’, ‘கென்னடி கிளப்’, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

Pradeep k Vijayan

கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரதீப் கே.விஜயன் உயிரிழந்திருக்கிறார். இரண்டு நாட்களாக அவரது வீடு பூட்டியிருந்திருக்கிறது. பிரதீப் வெளியே வரவில்லை. அவரது நண்பர்கள் அவரை போன் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இறுதியாக அவரது நண்பர்கள் காவல்துறையை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது அவர் இறந்தநிலையில் கிடந்துள்ளார்.

Pradeep k Vijayan

மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.