பெற்றோருடன் சென்ற காதல் மனைவி; தேடிச் சென்ற இளைஞன் விரட்டியடிப்பு – 3 நாளில் முடிந்த திருமண வாழ்க்கை

வேலூர், சத்துவாச்சாரிக்கு அருகேயுள்ள அலமேலுமங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன் – வயது 21. இவரும், காட்பாடி அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துவந்தனர். இது தெரியவர இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், எதிர்ப்பைமீறி கடந்த 3-ம் தேதி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன். இரண்டு நாள்கள் தேடி அலைந்த பிறகே மகள் தங்கியுள்ள வீட்டை பெற்றோர் கண்டுபிடித்தனர்.

இளைஞன் விரட்டியடிப்பு ( சித்திரிப்புப் படம் )

கடந்த 5-ம் தேதி, உறவினர்களுடன் அங்குவந்த இளம்பெண்ணின் பெற்றோர் சமாதானம் செய்து மகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து, காதல் மனைவியை தேடி கடந்த 9-ம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றார் மணிகண்டன். அங்கு காதல் மனைவி இல்லை. வீட்டில் இருந்த இளம்பெண்ணின் பெற்றோரும் ஆத்திரப்பட்டு மணிகண்டனை துரத்தியடித்திருக்கின்றனர். இந்த நிலையில், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் மறைத்துவைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் மணிகண்டன் அளித்துள்ள புகார் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.