பள்ளி வளாகம் அருகே மர்மமான முறையில் மாணவன் கல்லால் தாக்கி படுகொலை – தருமபுரி அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 17 வயது சிறுவன் கல்லால் தாக்கி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பென்னாகரம் போலீஸாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தது பெண்ணாகரம் அருகே பண்டஅள்ளி ஊராட்சி திப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் என்பவரின் மூத்த மகன் யாதவன் என்பது தெரியவந்தது. இவன் பண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 முடித்து தற்போது ப்ளஸ் 2 செல்ல இருந்தான். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பெருமாள் அவரின் மனைவி குமுதா ஆகியோருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கணவனிடம் கோபித்துக் கொண்டு குமுதா தாசம்பட்டியில் உள்ள தனது தாய் வழி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். தனது பாட்டி வீட்டில் இருந்த யாதவன் தனது தந்தையை சந்தித்து விட்டு வருவதாக நேற்று முன் தினம் மாலை கூறி சென்றுள்ளான். அதன் பின்னர் நேற்று காலை தாசம்பட்டி அரசு பள்ளி அருகே மர்மமான முறையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்து கிடந்தது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து பென்னாகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.