NET தேர்வில் முறைகேடு… தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு…

NET தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான UGC – NET தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள மத்திய கலவி அமைச்சகம் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ள அமைச்சகம் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.