2025 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து சம்பள முரண்பாடுகளும் நீக்கப்பட்டு, சம்பள உயர்வுகள், கொடுப்பனவுகள் மற்றும அதற்கான தீர்வுகள் வழங்கப்படும்

2025 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் நீக்கி அந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படவில்லை என்பதை நினைவுகூர்ந்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி இந்த நிபுணர் குழுவை நியமித்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.