டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து எம்.பி.க்களும் அவைக்கு வர வேண்டும் என கட்சி கொறடாக்கள் உத்தரவிட்டு உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவி நியமனத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சியினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக சார்பில், ஓம்பிர்லா 2வது முறையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை […]