ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் – கடற்றொழில் அமைச்சருக்கிடையில் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்தகப்பு கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (25.06.2024) இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ் பொது வேட்பாளர் விடயங்கள் தொடர்பிலும் இருவருக்கிடையே கலந்துரையாடப்பட்டது.

அதிகரித்திருக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ,தொடரும் கைதுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.