Vijay Sethupathi: ஏஸ், ட்ரெயின், ராம் கோபால் வர்மா படம் – விஜய் சேதுபதியின் மிரட்டல் லைன் அப்!

தமிழ் சினிமாவில் காலம் காலமாக பார்த்து சலித்த கதைப்போக்கு காட்சிகளிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட காலகட்டம் அது.

அப்போது நாயகன் பிம்பம் தகர்ப்பு, புதுப்புது கதைகள், பிளாக் ஹியூமர் என்று பரிசோதனை முயற்சிகள் அறிமுகமானபோது விஜய் சேதுபதி என்ற நடிகர்தான் நம்மை ஆச்சர்யப்படுத்தினார். துணிந்து வெவ்வேறு மாறுபட்ட வேடங்களை ஏற்றார். பிறகு வழக்கம்போல் கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டதில் பல சறுக்கல்கள் வந்தன. நண்பர்களுக்காக சில படங்கள் பழைய நண்பர்களுக்கு எக்கச்சக்கமான கேமியோ ரோல்கள் என்று செய்ததில் அவரது வித்தியாசமான இமேஜ் கொஞ்சம் மாறியது. ஏகப்பட்ட படங்கள் ஒப்புக்கொண்டதும் பிரச்னையை ஏற்படுத்தியது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி இப்போதைக்கு இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவை இரண்டில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படம் முடிந்து ரெடியாக இருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’ படமும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சில நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது. ஆச்சர்யமாக இதற்குப் பின்னால் அவரது எந்த பட அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை.

இப்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்ற செய்தி தீவிரமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா திடீரென விஜய் சேதுபதியை வந்து சந்தித்து விட்டு மூன்று மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றார். இப்போது அவர் ராம்கோபால் வர்மாவுக்கும் படம் செய்து தருவதாக ஒப்புக்கொண்டு விட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி, ராம் கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடுகிற ஒரு நல்ல கதையைப் பிடித்துக் கொண்டு அதை படமாக்க எண்ணியிருக்கிறார். அதில் நடிக்க இந்தி நடிகர் அஜய் தேவ்கனை அணுகியிருக்கிறார். அவரும் அந்த கதையை விரும்ப, டைரக்டர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியவில்லை.

அதனால் அவர் நேரடியாக சென்னைக்கு வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். ராம்கோபால் வர்மா டைரக்ட் செய்த ‘கம்பெனி’ படத்தை 2002-ம் ஆண்டு துபாயில் வைத்து பார்த்திருக்கிறார் சேதுபதி. அப்போதே அதன் மேக்கிங் பற்றி நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

நானா படேகர்

22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இயக்குநர் தன்னை வைத்து படம் செய்ய விரும்புவதை நினைத்து வியந்து, இனிமேல் தமிழ்ப் படங்கள் மட்டுமே செய்வேன் என்ற முடிவை மாற்றிக் கொண்டு ஒப்புக்கொண்டு விட்டார் சேதுபதி. அதில் முக்கியமான வேடத்தில் நானா படேகர் நடிக்கிறார். அவரோடு நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார் விஜய் சேதுபதி. மிக விரைவில் இந்த அறிவிப்புகள் வெளிவரப் போகின்றன. அதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.