கிளிநொச்சியில் தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் 48வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று (28) கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.

குறித்த போட்டித் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.00மணிக்கு கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகின.

இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, மாகாண கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த போட்டியில் ஒன்பது மாகாணங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் அணிகள் பங்குபற்றுவதுடன், இன்று நாளையும் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.