சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவத்துறை பணியிடங்கள் வரும் டிசம்பருக்குள் நிரப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்தார். அந்த விளக்கக் குறிப்பில். ”உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் […]