டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

பார்படாஸ்,

20 அணிகள் கலந்து கொண்ட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்களில் முறையே தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

பார்படாஸில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இதனால் நாளைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.