சென்னை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்து சாமி தாக்கல் செய்தார். அதில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டும் வகையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் […]