தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய அளவு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ள குடிநீர் வாரியம் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று மண்டலங்களுக்கு அவசரச் சூழ்நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் […]