48 வது தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட போட்டியின் இறுதி நாள் நிகழ்வு

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய 48 வது தேசிய விளையாட்டுப் போட்டி ஜூன் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது.

இத்தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு துரையப்பா விளையாட்டு அரங்கில் 30.06.2024 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான திரு.க.மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ் 48 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மாகாணங்களுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து மத்திய மாகாண அணி மோதிக்கொண்டது. இப்போட்டியில் வடக்கு மாகாண அணி வெற்றியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.