Nivetha Thomas: `இது தான் என் கணவர், இவர்கள் தான் என் 2 மகன்கள்!' – மேடையில் அதிரவைத்த நிவேதா தாமஸ்

திருமணம் குறித்து பரவிய செய்திகளுக்கு நடிகை நிவேதா தாமஸ் விளக்கமளித்திருக்கிறார்.

சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ மற்றும் ரஜினியுடன் ‘தர்பார்’ படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ’35 Chinna Katha Kaadu’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

நிவேதா தாமஸ்

இதனிடையே சமீபத்தில் நிவேதா தாமஸ், “It’s been a while….. but. Finally! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனால் நிவேதா தாமஸ் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ’35 Chinna Katha Kaadu’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனது திருமணம் குறித்து பரவிய செய்திகளுக்கு நடிகை நிவேதா தாமஸ் விளக்கமளித்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், ” எனக்குத் திருமணம் என்ற செய்திகளை பார்த்து என் அம்மா மிகவும் ஆச்சரியப்பட்டார். `குழந்தைகள் எதுவும் இருக்கிறதா?’ என்று என்னிடம் கிண்டலாகக் கேட்டார். நான் நடிக்கும் படம் குறித்துதான் ஒரு பதிவை வெளியிட்டேன். அதைப் பார்த்து நிறைய பேர் எனக்குத் திருமணம் ஆகப்போகிறது என்று வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள்.

’35 Chinna Katha Kaadu’

நான் தற்போது நடித்துள்ள படத்தில்தான் எனக்குத் திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்” என்று கூறி இது தான் என் கணவர், இவர்கள் தான் என்னுடைய 2 மகன்கள் முதல் மகன் பெயர் அருண், இரண்டாம் மகன் பெயர் வருண்” என்று நிவேதா தாமஸ் ’35 Chinna Katha Kaadu’ படத்தில் தனக்கு கணவனாகவும், மகன்களாகவும் நடித்தவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.