விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதில், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்தமுதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வங்கி தொடர்பான விடுபட்ட ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில்தாக்கல் செய்திருந்த மனுவைதள்ளுபடி செய்தும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங்லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்புக்குவழங்கவும் அமலாக்கத் துறைக்குஉத்தரவிட்டார். மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளிவைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (ஜூலை 10) வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.