நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு: மழையால் ஆட்டம் நிறுத்தம்

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஏற்கெனவே மழை பெய்து நின்ற நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.