விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இரண்டாம் கட்டமாக

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் மேலும் 03 பிரதேச செயலகப் பிரிவுகளைத் தெரிவு செய்து விவசாய நவீனமயமாக்கல் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் 10 மில்லியன் ரூபாய்கள் வீதம் 75 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டிலிருந்து 750 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக 15.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு

02. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம்

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2024.03.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் மேலும் 03 பிரதேச செயலகப் பிரிவுகளைத் தெரிவு செய்து விவசாய நவீனமயமாக்கல் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் 10 மில்லியன் ரூபாய்கள் வீதம் 75 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டிலிருந்து 750 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.