காபுல்,
ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் உள்ள கின்ஜான் மாவட்டத்தில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 17 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் 34 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :