2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான 10 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 02 தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் தற்போது பணமில்லை என்றும், இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறாது என்றும், பாராளுமன்ற இந்த ஆண்டு கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாராளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு எந்த அபிவிருத்தி திட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதில்லை என தெரிவித்த அமைச்சர், முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.