உணவுத் திருவிழாவும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்  உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2024) காலை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது எனவும், ஆவணி மாதம் 5 ஆம் திகதி பி.ப 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 வரையும், 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இதில் யாழ் மாவட்டத்திலுள்ள 85 தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக உள்ளூர்  உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சியும்  விற்பனையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி உணவுத் திருவிழாவில் பொது மக்கள் கலந்து கொண்டு உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்வுகள், நாடக நிகழ்வுகள் மற்றும் பெம்மலாட்டம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.