பூநகரி இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபை தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இரணைதீவு உப அலுவலகத்திற்குட்பட்ட முழங்காவில் வட்டாரம் மற்றும் வாடியடி உப அலுவலகத்திற்குட்பட்ட ஞானிமடம் வட்டாரம் என்பவையே அபிவிருத்தியடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் கடந்த ஜூன் 14ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பிலேயே பூநகரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.