Rahat Fateh Ali Khan: பிரபல பாடகர் துபாயில் கைது செய்யப்பட்டாரா!- நடந்தது என்ன?

பிரபல பாடகர் ரஹத் ஃபதே அலிகான் துபாயில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பரவிய தகவல்களுக்கு அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.

பிரபல பாகிஸ்தானி பாடகரான ரஹத் ஃபதே அலிகான், இந்தியில் ஏராளமான பாடல்களைப் பாடி இருக்கிறார். புகழ்பெற்ற ‘கவ்வாலி’ பாடகரான ஃபதே அலிகானின் பேரனான ரஹத், பாடிய இந்தி பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஹத் ஃபதே அலிகான் துபாயில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது ரஹத் ஃபதே அலிகானுக்கும் அவரது மேனேஜருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு பிரச்னையாகி இருக்கிறது.

Rahat Fateh Ali Khan

இதனால் அவர் மேனேஜரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார். இதனால் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி வழக்கு தொடுத்திருக்கின்றனர். அதன்படி பிரபல பாடகரான ரஹத் ஃபதே அலிகான் மீது மேனேஜர் வழக்கு தொடுத்ததன் அடிப்படையில் அவர் துபாயில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் தான் கைது செய்யப்படவில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.

அந்த வீடியோவில், “நான் ஒரு பாடல் பதிவு செய்ய துபாய்க்கு வந்திருக்கிறேன். நான் இங்கு கைது செய்யப்பட்டதாக சில தீங்கிழைக்கும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. தயவுசெய்து அதனை யாரும் நம்ப வேண்டாம்” என்று குறிபிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.